மத்தியபிரதேச முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 48916 பேருக்கு கொரேனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,36,861ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை ட்விட்டரில் அவரே உறுதி செய்திருக்கிறார். ``நான் கொரோனா தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றி வருகிறேன். மருத்துவர்களின் ஆலோசனையின்படி என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் தினசரி கொரோனா தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்வேன்” எனத் தெரிவித்திருக்கிறார் .